Saturday, January 13, 2018

7 - ஏழாம் கொஞ்சல்

சங்கத் தமிழ்ப் பாடல்கள்...ஒவ்வொன்றும் ரசிக்கத்தக்கவை...இலக்கியச் சுவை மிக்கவை.அவற்றில் ஒன்று கம்பர் எழுதியது.இந்த கம்பர் ராமாயணம் பாடியவரா எனத் தெரியவில்லை.

எந்தப் புலவரானால் என்ன...தமிழைச் சுவைப்போம்

பொன்னி வளநாட்டில் மாத்தத்தன் என்கிற அழகன். அவனது அழகில் மயங்கி, அவன் மீது காதலுற்ற காரணத்தால் மங்கையர்தம் மேனி மெலிய, அவர்கள் அணிந்திருந்த வளையல் கழன்றனவாம். இதை, (சொற்பொருட் பின்வருநிலை அணி எனும் இலக்கணப்படி) "வளை" எனும் வார்த்தையை வைத்துக்கொண்டு விளையாடுகிறார் கவிஞர்.

"இருந்தவளை போனவளை என்னை அவளைரார்
 பொருந்த வளைபறித்துப் போனான் - பெருந்தவளை
 பூத்தத்தத் தேன்சொரியும் பொன்னிவள நன்னாட்டில்
 மாத்தத்தன் வீதியில் வந்து."

சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக்கொள்வேன் வளையிட்டு என்னவளை காதல் சொன்னவளை என்கிற கண்ணதாசன் பாடல் ஞாபகம் வருகிறதா?

No comments:

Post a Comment

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...