Thursday, January 11, 2018

முதல் கொஞ்சல்

ஒருமுறை சங்கரன் பிள்ளையின் மனைவி ஊருக்குப் போயிருந்தாள்..சங்கரன் பிள்ளை..காலை உணவிற்காக ஒரு சட்டியில்..மாவைப் போட்டு வறுத்துக் கொண்டிருந்தார்.அப்போது அவர் நண்பர் ஒருவர் வந்தார்..என்ன சங்கரன் 'ஏதோ மாவை வறுக்கறீர்கள்' என்றார்..

அதற்கு 'சட்டியில் மா வறுக்கும் தொழில் சங்கரன் பிள்ளைக்கு அன்றி வேறு யாருக்கு உரியது?' என்றார் இரு பொருள்பட பிள்ளை அவர்கள்.

முதல் பொருள்..இந்த சங்கரன் பிள்ளை மா வறுத்துக் கொண்டிருக்கும் தொழிலை செய்துக் கொண்டிருக்கிறார் என்று பொருள்.

இரண்டாம் பொருள்..
சட்டியில்- சஷ்டி திதியில்
மா வறுக்கும்- மாமரம் போல நின்ற சூரபத்மனை வதைக்கும்
தொழில்-செயல்
சங்கரன் பிள்ளைக்கன்றி-சங்கரன் பிள்ளையான முருகனுக்கு அன்றி
வேறு யாருக்கு உரியது-வேறு யாருக்கும் உரியது இல்லை

என்பதாம்.

இப்படி அந்த நாட்களில் அனைவரிடமும் தமிழ் கொஞ்சி விளையாடியது..

No comments:

Post a Comment

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...