Sunday, February 25, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்- 45

நாலடியார் பாடல் ஒன்று

வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்
வைகலும், வைகலை வைகும் என்று இன்புறுவர்-
வைகலும் வைசுற்றம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்

ஒவ்வொரு நாளும் ஒரு புது நாள் வருவதன் மூலம், தம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக் குறைந்து கொண்டே வருகிறது என்பதை எண்ணிப் பார்க்காமல், நாள்தோறும் தங்கள் வாழ்நாள் வளர்ந்து வருகிறது என்றெண்ணி மயங்கும் மூடர்கள், வருகிற ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்வை அறுக்கவரும் வாள் என்றறிய மாட்டார்கள்

இப்பாடலில் வைகல் என்ற சொல் நாள் என்ற பெயரில் பல இடங்களில் வருவதால்
இது சொல் பொருள் பின்வருநிலை அணியைச் சேர்ந்ததாகும் 



No comments:

Post a Comment

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...