Sunday, April 29, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 56

படம் - விநோதன்
இசை - இமான்
பாடல்- மதன் கார்க்கி
பாடியவர்கள் - ஹரிச்சரண், ஷாஷா திரிபாதி
---------------------------------------------------------------------------

மேக ராகமே
மேள தாளமே
தாரா ராதா

கால பாலகா
வாத மாதவா
ராமா மாரா

மாறுமா கைரேகை மாறுமா
மாயமா நீ நீ நீ மாயமா

தோணாதோ
கான கனகா

மேக ராகமே
மேள தாளமே
தாரா ராதா

கால பாலகா
வாத மாதவா
ராமா மாரா

மாறுமா கைரேகை மாறுமா
மாயமா நீ நீ நீ மாயமா
தோணாதோ
கான கனகா

வான கனவா
வாச நெசவா

மோகமோ
மோனமோ

பூ தந்த பூ
தீ தித்தி தீ
வா கற்க வா
போ சீச்சீ போ
தேயாத வேல நிலவே

மேக ராகமே
மேள தாளமே
தாரா ராதா

சேர அரசே
வேத கதவே
நேசனே
வாழவா

நீ நானா நீ
மா மர்மமா
வைர இரவை
தைத்த விதத்தை
தேடாதே
மேகமுகமே

மேக ராகமே
மேள தாளமே
தாரா ராதா

கால பாலகா
வாத மாதவா
ராமா மாரா

மாறுமா கைரேகை மாறுமா
மாயமா நீ நீ நீ மாயமா

தோணாதோ
கான கனகா

மேக ராகமே
மேள தாளமே
தாரா ராதா









Thursday, April 26, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 55

கந்தர் அந்தாதியில் ஒரு பாடல்

உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்
உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்
உண்ணாமுலையுமை மைந்தா சரணந் தனமொப்பில்
உண்ணாமுலையுமை மைந்தா சரணங் சரணுனக்கே


பதவுரை-

உண்- கன்றுகள் மிகுதியாக உண்ணுகின்ற

ஆ - பசு இனங்கள் (வாழ்கின்ற)

முலை - முல்லை நிலத்திற்கு

உ - தலைவனாகிய திருமாலின்

மை - கருமை நிறத்தையும்

மைந்து  - வலிமையும்

ஆசு - உவர்ப்பாகிய குற்றத்தையும் (உடையதாய்)

அரண் - கோட்டையாக உள்ள

அம்பர் - கடலில் ஒளிர்ந்திருக்கின்ற அசுரர்களின்

உயிர் - ஜீவனை

சேர் - மாய்த்து

உள்= தேவர்களின் உள்லத்தில் இருந்த

நாம் - அச்சத்தை

உளையும்- போக்கி அழித்த

ஐ- தெய்வமே


மை தா - ஆட்டு வாகனத்தில் ஏறும்

சர் - உழணத்தை உடைய அக்னி தேவன்

அண் - சேர்ந்திருக்கும்

நம் - நம் அடைக்கலம் புகுவத்ற்கு இடமாகிய

அருணை வெற்பாள் - அண்ணாமலையில் விளங்கி அருளும்

உண் - மிகுதியாகப்

ஆம் - பெருகும்

முலையும் - கற்புடமைக்கும்

ஐ- அழகிய

மை - அஞ்சனம் தீட்டிய

தா - செவிகளை எட்டிப் பிடிக்கும்

சர - விழிகளின்

நந்தனமும் - கிருபைக்கும்

ஒப்பில்- ஒப்புவமை இல்லாத

உண்ணாமலை உமை - உண்ணாமுலை என் கிற பெயர் கொண்ட பார்வதியின்

மைந்தா - குமரனே

சரண்..சரண்..உனக்கே - உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்



பொழிப்புரை -

திருமாலின் நிறம் போல் கறுத்தும் வலிமையும் உவர்ப்புமுடைய கடலின் கண் அசுரர்களை மாய்த்து தேவர்களின் மனத்தில் இருந்த பயத்தை நீக்கிய தெய்வமே, அக்கினியின் சொரூபமாகிய அருணாசலத்தில் வீற்றிருக்கும் கருணை கடாஷத்திற்கும் ,கற்புடமைக்கும் ஒப்புவமை இல்லாத பார்வதிதேவியின் குமாரனே, நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்

Monday, April 16, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 54

இதர உதர உவமை

ஒரே பாடலில் உவமேயத்தை உவமானமாகவும், உவமானத்தை உவமேயமாகவும் தொடர்ச்சியாகக் கூறுவது இதர உதர உவமை ஆகும்.
அதாவது, முதலில் உவமானமும்,உவமேயமுமாகச் சொல்லுதல்.இவ்வாறு சொல்வதன் நோக்கம், இப்பொருளுக்கு ஒப்புமையாகக் கூடிய மூன்றாவது பொருள் எதுவும் இல்லையென குறிப்பது ஆகும்
இதர விதுரம் என்ற தொடருக்கு ஒன்றிற்கொன்று எனப் பொருள்

களிக்கும் கயல்போலும் நும்கண்: நும்கண்போல்
களிக்கும் கயலும்: கனிவாய்த் தளிர்க்கொடியீர்:
தாமரைப்போல் மலரும் நும்முகம்:நும்முகம்போல்
தாமரையும் செவ்வி தரும்

தளிரோடு கூடிய கொடி போன்ற நங்கையீர்"கயல் மீன்களைப் போல நும் கண்கள் களிக்கின்றன.நும் கண்களைப் போலக் கயல் மீன்களும் களிக்கின்றன.தாமரைப்போல நும் முகம் மலர்ந்துள்ளது.நும் முகம் போல தாமரையும் மலர்ந்து அழகு தருகின்றது

Saturday, April 14, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 53

சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய ஐந்திணை ஐம்பது என்னும் நூலிலே காதலின் தியாகத்தினை ஒரு அழகான பாடல் மூலம் மாறன் பொறையனார் எடுத்துக் காட்டியுள்ளார்


"சுனைவாய்ச் சிறுநீரை எயிதாதென்(று) எண்ணியப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக்  கலைமான் தன்
கள்ளத்தின் உச்சும் சுரமென்பார் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி"

சுனையில் சிறிதளவே நீர் உள்ளது.ஒரு மானே அருந்தும் அளவுள்ளது.ஆண்மான் குடிக்காது விட்டால் பெண்மான் குடிக்காது.எனவே ஆண்மான் சுனைநீரில் குடிப்பது போல வாயை வைத்துப் பாவனை செய்து பெண்மானை குடிக்கச் செய்கிறது.காதலிலே, விட்டுக் கொடுப்புகள்,தியாகங்கள்,அன்புப் பரிமாற்றங்கள் அளவுக்கதிகமாகப் பேணப்படுகின்றன 

கொஞ்சி விளையாடும் தமிழ் - 52


      உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்
      உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்
      உண்ணா முலையுமை மைந்தா சரணந் தனமுமொப்பில்
      உண்ணா முலையுமை மைந்தா சரணங் சரணுனக்கே.

......... சொற்பிரிவு .........

உண் ஆ முலை உமை மைந்து ஆசு அரண் அம்பரர் உயிர்சேர்

உள் நாம் உலையும் ஐ மை தா சர் அண் நம் அருணை வெற்பாள்

உண் ஆம் முலையும் ஐ மை தா சர நந்தனமும் ஒப்பில்

உண்ணா முலை உமை மைந்தா சரணம் சரண் உனக்கே.

......... பதவுரை .........

உண் ... கன்றுகள் மிகுதியாக உண்ணுகின்ற,

ஆ ... பசு இனங்கள் (வாழ்கின்ற),

முலை ... முல்லை நிலத்திற்கு,

உ ... தலைவனாகிய திருமாலின்,

மை ... கருமை நிறத்தையும்,

மைந்து ... வலிமையும்,

ஆசு ... உவர்ப்பாகிய குற்றத்தையும் (உடையதாய்),

அரண் ... கோட்டையாக உள்ள,

அம்பர் ... கடலில் ஒளிந்திருக்கின்ற அசுரர்களின்,

உயிர் ... ஜிவனை,

சேர் ... மாய்த்து,

உள் ... தேவர்கள் உள்ளத்தில் இருந்த,

நாம் ... அச்சத்தை,

உளையும் ... போக்கி அழித்த,

ஐ ... தெய்வமே,

மை தா ... ஆட்டு வாகனத்தில் ஏறும்,

சர் ... உஷ்ணத்தை உடைய அக்னி தேவன்,

அண் ... சேர்ந்திருக்கும்,

நம் ... நாம் அடைக்கலம் புகுவதற்கு இடமாகிய,

அருணை வெற்பாள் ... அண்ணாமலையில் விளங்கி அருளும்,

உண் ... மிகுதியாகப்,

ஆம் ... பெருகும்,

முலையும் ... கற்புடமைக்கும்,

ஐ ... அழகிய,

மை ... அஞ்சனம் தீட்டிய,

தா ... செவிகளை எட்டிப் பிடிக்கும்,

சர ... விழிகளின்,

நந்தனமும் ... கிருபைக்கும்,

ஒப்பில் ... ஒப்புவமை இல்லாத,

உண்ணாமுலை உமை ... உண்ணாமுலை என்கிற பெயர் கொண்ட பார்வதியின்,

மைந்தா ... குமாரனே,

சரண் சரண் உனக்கே ... உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்.

......... பொழிப்புரை .........

திருமாலின் நிறம் போல் கறுத்தும் வலிமையும் உவர்ப்புமுடைய கடலின் கண் அசுரர்களை மாய்த்து தேவர்களின் மனத்தில் இருந்த பயத்தை நீக்கிய தெய்வமே, அக்கினியின் சொருபமாகிய அருணாசலத்தில் வீற்றிருக்கும் கருணை கடாஷத்திற்கும் கற்புடமைக்கும் ஒப்புவமை இல்லாத பார்வதி தேவியின் குமாரனே, நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்.

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...