நல்வழி பாடல் ஒன்று
ஆவாரை யாரே அழிப்பர்? அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்?- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்யம் புவியதன் மேல்.
ஆவாரை யாரே அழிப்பர்? அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்?- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்யம் புவியதன் மேல்.
அழகிய பூமியில் வாழ்வாரை அழிக்க வல்லவர் யாவர்? ஒருவராலும் முடியாது; ஏனெனில், அது அவரவர் செய்த நல்வினை தீவினைகளால் விதிக்கப்பட்டது.
அதுவல்லாமல், இறந்துபோகும் விதியுடையவரை யாரால் காப்பாற்ற முடியும்.
ஒருவராலும் முடியாது. பிச்சைக்கு செல்வாரை தடுக்கவல்லவர் யாவர். இஃது உண்மையாகும். எப்போதும் (ஓயாமல்) ஏதேனும் ஒன்றுபற்றிச் சந்தேகம் கொள்பவரை யாரால் தெளிவிக்க முடியும்; ஒருவராலும் முடியாது; அது அவரவர் விதி.
ஊழால் வரும் நன்மை தீமைகளைத் தவிர்க்க வல்லவர்கள் இல்லை.
அதுவல்லாமல், இறந்துபோகும் விதியுடையவரை யாரால் காப்பாற்ற முடியும்.
ஒருவராலும் முடியாது. பிச்சைக்கு செல்வாரை தடுக்கவல்லவர் யாவர். இஃது உண்மையாகும். எப்போதும் (ஓயாமல்) ஏதேனும் ஒன்றுபற்றிச் சந்தேகம் கொள்பவரை யாரால் தெளிவிக்க முடியும்; ஒருவராலும் முடியாது; அது அவரவர் விதி.
ஊழால் வரும் நன்மை தீமைகளைத் தவிர்க்க வல்லவர்கள் இல்லை.