Sunday, June 30, 2019

நல்வழி

நல்வழி பாடல் ஒன்று

ஆவாரை யாரே அழிப்பர்? அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்?- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்யம் புவியதன் மேல்.

அழகிய பூமியில் வாழ்வாரை அழிக்க வல்லவர் யாவர்? ஒருவராலும் முடியாது; ஏனெனில், அது அவரவர் செய்த நல்வினை தீவினைகளால் விதிக்கப்பட்டது.
அதுவல்லாமல், இறந்துபோகும் விதியுடையவரை யாரால் காப்பாற்ற முடியும்.
ஒருவராலும் முடியாது. பிச்சைக்கு செல்வாரை தடுக்கவல்லவர் யாவர். இஃது உண்மையாகும். எப்போதும் (ஓயாமல்) ஏதேனும் ஒன்றுபற்றிச் சந்தேகம் கொள்பவரை யாரால் தெளிவிக்க முடியும்; ஒருவராலும் முடியாது; அது அவரவர் விதி.
ஊழால் வரும் நன்மை தீமைகளைத் தவிர்க்க வல்லவர்கள் இல்லை.

No comments:

Post a Comment

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...