Sunday, March 4, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் -51

சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள 
றையினில் கிடந்துபோது அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர்
பறையறைந்து நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர்
புரை இலாத ஈசரோடு போருந்துமாறது எங்ஙனே?
 
 பெண்கள் அறையில் ஒதுங்கிக் கிடந்தால் தீட்டுஅவர்கள் குளிக்கும் அறையில்குளித்தால் தீட்டு, தாரைத் தப்பை சப்தத்துடன், பிறந்தால் தீட்டுஇறந்தால் தீட்டு என்றுசொல்கின்றீர்களே! இவ்வுடம்பில் உயிரில் உள்ள தீட்டோடுதானே ஈசன் பொருந்தி இருக்கின்றான். அதனை அறியாமல் தீட்டு என்று ஒதுக்குவதில் என்ன பயன் கண்டீர்கள்?

Friday, March 2, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்-50


திருவள்ளுவ நாயனார்(பொய்யாமொழி புலவர் அல்ல ) தன் மனைவி இறந்தபோது இதனைப் பாடியதாகச் சொல்கின்றனர்.

அடிசிற் கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய் – அடிவருடிப்
பின்தூங்கி முன்எழுந்த பேதையே போதியோ

என்தூங்கும் என்கண் இரா.

இனிய உணவு சமைத்துத் தருபவளே! என்மீது அன்பு கொண்டவளே! நான் (சொன்ன)படி தவறாமல் நடக்கும் (பொம்மலாட்டப் பொம்மைப்)பாவை போன்றவளே! என் கால்களை அமுக்கி என்னைத் தூங்க வைத்துவிட்டுப் பின்னர் தூங்கி நான் துயிலெழுவதற்கு முன்பே எழுந்து கடமைகளைச் செய்யும் பேதைப் பெண்ணே! நீ என்னை விட்டுவிட்டுப் போகிறாயா? இனி என் கண் இரவில் எப்படித் தூங்கும்?


Thursday, March 1, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 49

முத்தொள்ளாயிரம்
கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம் ஆகும். தலைவன் 
- தலைவி என்னும் இருபாலரில் ஒருவர் மட்டும் மற்றொருவரைக் 
காதலிப்பது (கை - சிறுமை அல்லது ஒரு பக்கம் ; கிளை - உறவு) 
பெரும்பாலும் தலைவனிடமே கைக்கிளை நிகழ்வதாகப் பாடல்கள் 
அமைகின்றன.






  • கைக்கிளை பாடல்

  •     இந்நூலின் பெரும்பாலான செய்யுட்கள் கைக்கிளை சார்ந்தன
    என்று பார்த்தோம். அவற்றுள் ஒன்றை இங்கு உதாரணமாகக்
    காணலாம்.

        பாண்டியன் நகர் வலம் வந்தான். அவனை ஒரு கன்னிப்
    பெண் கண்டாள். உடன் அவன்பால் மட்டில்லாக் காதல்
    கொண்டாள். அதன் காரணமாக உடல் முழுதும் பசலை படர்ந்தது.
    தன் உடம்பிலே பசலை படரக் காரணம் தன் கண்கள் அவனைக்
    கண்டமையே என்று எண்ணினாள். அவ்வாறெனில் அதற்குரிய
    தண்டனையை அடைய வேண்டியவை அக்கண்களல்லவா?
    ஆனால் அதற்கு மாறாக, ஒரு பாவமும் அறியாத அவள்
    தோள்களல்லவா தண்டனை பெற்றன! இஃது எவ்வாறு என்றால்
    உழுத்தஞ்செடி வளர்ந்த வயலில் மேய்ந்து அழிவு செய்த செயல்
    ஊர்க்கன்றுகளாக இருக்க, ஒன்றும் அறியாத கழுதையின் காதை
    அறுத்துத் தண்டித்தது போன்றது என்று நினைத்து வருந்தினாள்.
    இப்பொருள் அமைந்த பாட்டு வருமாறு:

    உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
    கழுதை செவி அரிந்தற்றால் - வழுதியைக்
    கண்ட நம் கண்கள் இருப்பப் பெரும் பணைத்தோள்
    கொண்டன மன்னோ பசப்பு     (60)
    (செய் = வயல்; பணைத்தோள் = மூங்கில் போன்ற தோள்;
    பசப்பு
     = மேனியில் தோன்றும் நிற வேறுபாடு)

    கொஞ்சி விளையாடும் தமிழ்

    பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...