Friday, January 19, 2018

14- பதினாங்காம் கொஞ்சல்

கொஞ்சி விளையாடும் தமிழ்

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்


பொருள்:அஞ்சிலே ஒன்று பெற்றான் (ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு,ஆகாயம் இவற்றில் காற்று தன்மையாகிய வாயு என்ற பயர் பெற்றவன் பெற்றெடுத்த பிள்ளை)

அஞ்சிலே ஒன்றைத் தாவி (ஐம்பூதங்களில் நீர் தன்மையாகிய சமுத்திரத்தைதாண்டி ஆகாய மார்க்கமாக இந்திய திருநாட்டில் இருந்து இலங்கை நாட்டைஅடைந்தவன்)

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி (ராம, இலக்குவன, பரத, சத்ருகுண சகோதரர்கள் நான்கு என இருக்க, இராமரால் கட்டி தழுவப் பட்டகுகன் ஐந்தாம் சகோதரனாகி, அந்த ஐந்து சகோதரர்களுக்கு ஆறாவதாகசேர்ந்தவர் இவர். இவர் தனது உயிருனும் மேலான இராம பிரானின் உயிர்காக்க சீதையை தேடி சென்றவர்)

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு (ஐம்பூதங்களில் நிலதன்மையாகிய பூமித் தாய் பெற்றெடுத்த பெண் சீதை, அணங்கு: பெண் ; அந்தசீதையை கண்டுபிடித்து வந்தவன்)

கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான் (அயலார்: மற்றவர்; இவர்தனது ஊர் என்று சொல்ல முடியாதபடி நற்பெருமைகள் எதுவும் இல்லாதநாட்டில் ஐம்பூதங்களில் நெருப்பு தன்மையாகிய அக்கினியை வைத்து அந்தஊரையே தீக்கிரையாக்கியவர்)

அவன் எம்மை அளித்துக் காப்பான் (இத்தகு பெருமைகள் உடையவர். பாடலில் யார் இவர் என்று குறிப்பிடவில்லை என்றாலும், இது அனுமரே! அந்தஅனுமர் பெருமான் நமக்கு வாழ்வில் தேவையானதை அளித்து காத்துஅருள்வார்!)

நோக்கம்: இராமயணத்தில் சிறந்த சேவை செய்தவர்களுள் தலையாயவரானஅனும பெருமாளை போற்றி பாட பட்ட பாடல் ஆகும்

No comments:

Post a Comment

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...