Saturday, January 27, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 20

ஸ்ரீராமரின் அழகை கம்பன் விமரிசிப்பதைக் காணுங்கள்..ரசியுங்கள்


தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன

தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே

வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்

ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவுகண் டாரைஒத்தார்.

பொருள்:


தோள்கண்டார் = இராமனின் தோள்களை கண்டவர்கள் 

தோளே கண்டார் = அந்த தோளை மட்டும் தாம் பார்க்க முடியும். அதை விட்டு அவர்கள் கண்களை எடுக்க முடியாது, அவ்வளவு அழகு

தொடுகழல் = கழல் எப்போதும் தொட்டு கொண்டிருக்கும்  

கமலம் அன்ன = தாமரை போன்ற
தாள்கண்டார் = அடிகளை கண்டவர்கள் 

தாளே கண்டார்=அந்த திருவடிகளை மட்டுமே கண்டார்

தடக்கை கண்டாரும் = கையை கண்டவரும் 

அஃதே= அதே போல் கையை மட்டும் கண்டனர்.
வாள்கொண்ட=வாள் போன்ற கூரிய

கண்ணார் = கண்களை உடைய பெண்கள்

யாரே வடிவினை முடியக் கண்டார் = யாருமே அவன் முழு அழகையும் காணவில்லை

ஊழ்கொண்ட = எப்போது தோன்றியது என்று அறியா காலம் தொட்டு உள்ள 

சமயத்து அன்னான் மதங்களில் உள்ள கடவுளின் 

உருவுகண் டாரை ஒத்தார்.   = உருவத்தை கண்டவர்களை போல அந்த பெண்கள் இருந்தார்கள்


எப்படி கடவுளை முழுமையாக கண்டு கொள்ள முடியாது. அது போல இராமனின் அழகையும் முழுமையாக கண்டு உணர முடியாதாம்....

கம்பனிடம் தமிழ்  விளையாட்டை ரசித்தீர்களா?

No comments:

Post a Comment

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...