Saturday, February 17, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் =38

சிறுபஞ்சமூலம் காரியாசான் இயற்றியது

மயிர்வனப்பும், கண் கவரும் மார்பின் வனப்பும்
உகிர் வனப்பும், காதின் வனப்பும், செயிர் தீர்ந்த
பல்லின் வனப்பும்,வனப்பு அல்ல: நூற்கு இயைந்த
சொல்லின் வனப்பே வனப்பு

தலை முடி,மார்பு, நகம்,செவி,பல் இவைதரும் அழகு ஒருவருக்கு அழகல்ல.நல்ல நூல்களைக் கற்று சொல்வன்மையால் வரும் அழகே சிறந்த அழகாகும்.

சாதாரண சொற்களால், எவ்வளவு பெரிய அர்த்தத்தைத் தர முடிகிறது.

என் தமிழுக்கு ஈடு இணை உண்டோ?

No comments:

Post a Comment

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...