Monday, February 19, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 39

ஏலாதியில் ஒரு பாடல்

பொய்யுரையான் வையான் புறங்கூறான் யாவரையும்
மெய்யுரையா னுள்ளனவும் விட்டுரையான் - எய்யுரையான்
கூந்தன்மயி லன்னாய்! குழீஇயவான் விண்ணோர்க்கு
வேந்தனா மிவ்வுலகம் விட்டு.

(இ-ள்.) கூந்தல் மயில் அன்னாய் - மயிற்றோகையைப் போன்ற கூந்தலையுடைய பெண்ணே!, 
பொய் உரையான் - பொய் சொல்லான்; 
வையான் - எவரையும் இகழான்; 
யாவரையும்-ஒருவரையும், 
புறங்கூறான் - புறம்பாக இழித்துப் பேசான்; 
மெய் உரையான் - பிறர் துன்பத்தை நீக்குதற்காக நடந்த உண்மையைச் சொல்லான், 
உள்ளனவும் - தன்மாட்டு உள்ள பொருள்களையும், 
விட்டு உரையான் - வெளிப்படுத்துச் சொல்லான், 
எய் உரையான் - நண்பன்மாட்டுந் தன் வறுமையை வெளிப்படுத்தானாகிய இவன், 
இவ்வுலகம் விட்டு - இம்மண்ணுலகத்தை விட்டு நீங்கி, 
வான் குழீஇய - மேலுவலகத்திற் கூடியுள்ள, 
விண்ணோர்க்கு - தேவர்களுக்கு, 
வேந்தன் ஆம் - தலைவனாவான்.

No comments:

Post a Comment

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...