Tuesday, February 20, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 40

கொஞ்சி விளையாடும் தமிழ்
---------------------------------------------------

இந்தப் பாடலில் தமிழின் விளையாட்டைப் பாருங்கள்.

காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுங்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணிமுக்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுநாற்
காணியுங் காணியுங் காணியுங் காட்டுங் கழுக்குன்றமே
இந்தப்பாடலின் அர்த்தம் என்ன?
தமிழ்த்தாத்தா உவேசாமிநாதய்யர் தம்முடைய ஆசிரியராகிய மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளையிடம் படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு விடுகவியை யாரோ சொல்லியிருக்கிறார்கள். அந்த விடுகவிக்கு யாராலும் ரொம்ப காலமாகப் விளக்கம் சொல்லமுடியவில்லை. அந்தவாறே அது பலகாலமாக உலவிக்கொண்டு வந்திருக்கிறது. எத்தனை நூற்றாண்டுகள் ஆயினவோ தெரியவில்லை.
இந்தப் பாடலை பிள்ளையவர்களிடம் சொல்லிப் பொருள் கேட்டபோது மிக விரைவாக அநாயாசமாக எளிதாகப் பொருள் சொல்லிவிட்டார்.
இந்த நிகழ்ச்சியை ஐயரவர்கள் தம் ஆசிரியரைப் பற்றி எழுதியுள்ள வரலாற்று நூலில் காணலாம்.
அந்த நூலில் பிள்ளையவர்கள் கூறிய பதில் மட்டும்தான் இருக்கிறது.
அது எப்படி என்று விளக்கப்படவில்லை.
அக்காலத்தில் காணி, மாகாணி போன்ற பின்னங்கள் வழக்கில் இருந்தன. ஆகையால் அந்தக் கணக்கெல்லாம் அவரவர் ஊகித்து அறிந்துகொள்ளமுடிந்திருக்கும். ஆகவே ஐயரவர்கள்
அந்தக் கணக்கை விளக்காமல் விட்டிருப்பார் போலும்.
பிள்ளையவர்கள் கூறிய பொருளை வைத்து நானே கணக்குப் போட்டு கீழே விளக்கியிருக்கிறேன்........
ஒன்றில் எண்பதில் ஒரு பங்கு 1/80 'காணி' எனப்படும்.
மேற்கூறிய பாடலில் இருபது முறை 'காணி' வருகிறது.
எப்படி என்று பார்ப்போம்......
ஒவ்வொரு அடியாகக் கணக்கிடுவோம்......
1/80 + 1/80 + 1/80 + 1/80 + 1/80 + (கால்காணி) 1/320 +
1/80 + 1/80 + 1/80 + 1/80 + (முக்கால்காணி) 3/320 +
1/80 + 1/80 + 1/80 + 1/80 + (நாற்காணி) 1/80 + 1/80 + 1/80 + 1/80 +
1/80 + 1/80
20 X 1/80 = 1/4
கால்!
கால் காட்டும் கழுக்குன்றமே.
மோட்ச கதியை அடைவதற்குத் திருக்கழுக்குன்றம் தன்னுடைய காலை அடைக்கலமாகக் காட்டும்.

No comments:

Post a Comment

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...