எல்லாம் அறிந்தவர் யாருமில்லை.
மெத்தப்படித்தவனுக்குத் தெரியாதது ஒன்று படிக்காத ஒருவனுக்கு தெரிந்திருக்கக் கூடும்,
அதனால்தான் கற்றது கைமண் அளவு என்றார்.
சுட்டப்பழம்..சுடாத பழம் என்பதை ஔவைக்கு சொல்லிக் கொடுத்தவன் குமரன்
அப்படிப்பட்ட ஔவையிடம் ஒருசமயம், அரசன்
“ கம்பரைப் போல பெரிய காப்பியம் பாடும் திறன் யாருக்கும் இல்லை "என்று சொல்லியபோது ஒளவையார் பாடியது.
மெத்தப்படித்தவனுக்குத் தெரியாதது ஒன்று படிக்காத ஒருவனுக்கு தெரிந்திருக்கக் கூடும்,
அதனால்தான் கற்றது கைமண் அளவு என்றார்.
சுட்டப்பழம்..சுடாத பழம் என்பதை ஔவைக்கு சொல்லிக் கொடுத்தவன் குமரன்
அப்படிப்பட்ட ஔவையிடம் ஒருசமயம், அரசன்
“ கம்பரைப் போல பெரிய காப்பியம் பாடும் திறன் யாருக்கும் இல்லை "என்று சொல்லியபோது ஒளவையார் பாடியது.
வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால்; -- யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாம்கான்
எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது.
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால்; -- யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாம்கான்
எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது.
தூக்கணங் குருவியின் கூடும், வன்மையான அரக்கும், கரையான் புற்றும், தேன் கூடும், சிலந்தி வலையும் எல்லோராலும் செய்யக்கூடியவை அல்ல, ஆதலால் யாம் மிக்க திறமையுள்ளவர் என்று ஒருவர் தம் பெருமையைக் கூறல் கூடாது. ஏனெனில் எல்லோரும் ஒவ்வொன்று எளிது.
எல்லோரும் ஒவ்வொன்று எளிது என்பதை மிகவும் தெளிவான உதாரணங்கள் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார். இதுபோன்ற பாடல்கள் முலம் சங்ககால தமிழ் புலவர்களின் திறமையையும் தமிழின் சிறப்பையும் நம்மால் உணர முடிகிறது.
No comments:
Post a Comment