Wednesday, February 21, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்- 42

கம்பன் கண்ட மருத நில வேளாளரைப் பாருங்கள்

‘’ தொழும் குலத்தில் பிறந்தான் ஏன்?
    சுடர் முடிமன் னவர் ஆகி
எழும் குலத்தில் பிறந்தால் ஏன்?
   இவர்க்குப்பின் வணிகர்எனும்
செழுங்குலத்தில் பிறந்தர் ஏன்?
  சிறப்புடையர் ஆனால்ஏன்?
உழும்குலத்தில் பிறந்தாரே
   உலகு உய்யப் பிறந்தாரே  …
….. 
. தொழுங்குலம், அந்தணர் குலம், எழும்குலம், மன்னர்குலம், செழுங்குலம், வணிகர் குலம், எந்த குலத்தில் பிறந்தாலும்.  உழும்  குலத்தில் பிறப்பதை  தான் உயர்வு என் கிறார்.  உழும் குலந்தான் உற்பத்தி செய்கிறது. தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் உற்பத்தியை, உணவை தருகிறனர். மற்ற குலத்திற்கும் உணவளிக்கும் உயர்ந்த குலம் என்று பதித்தார். .
உழும் குலமே ஆண்ட குலம் ஆளபோகும் குலம்
உழும் குலம் தான் தன் உயர்வால் மண்ணை ஆண்டது. சங்ககாலம் காட்டுகிறது.  ஏர் எழுபதால் ஏராளர் எழ வேண்டும். பார் ஆள வேண்டும். அது தான் தமிழ் உழவர் ஆட்சி !!!!!  

No comments:

Post a Comment

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...